கோவை தெற்கு மண்டலம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் சார்பாக சவுக்கு சங்கரின் சேனலை முடக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ் சமூகத்தையும், நீதித்துறையையும், காவல்துறையையும் தரக் குறைவாக பேசி வரும் சவுக்கு சங்கரை கண்டித்தும், அவரது இணையதளத்தை முடக்க வேண்டும் என நேதாஜி மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தினர்.



கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேதாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை கண்டித்தும் அவரது இணையதளத்தை முடக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் மண்டிக் கிடக்கிறது என கடந்த ஜூலை 22-ஆம் தேதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சவுக்கு சங்கர் பேட்டி அளித்திருந்தார். அப்போது, ஒரு தீர்ப்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி தனிப்பட்ட வகையில் நீதிபதி ஒருவரையும் விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்க மறுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.



இந்த நிலையில், கோவை தெற்கு மண்டலம் நேதாஜி மக்கள் இயக்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சவுக்கு சங்கரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், தமிழ் சமூகத்தையும், நீதித்துறையையும், காவல்துறையையும் தரம் குறைவாக பேசு வரும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது இணையதளத்தை முடக்க வேண்டும் என நேதாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...