ஒண்டிப்புதூர் உண்டு உறைவிட பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியை நேரில் ஆய்வு மேற்கொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.



அப்பள்ளியின் சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை, எண்ணும் எழுத்தும் திட்ட அறை, கல்வி பயிலும் அறை, கணினி அறை, கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



அதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து மாணவ ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அவர் மாணவர்கள் பாடத்தை முழுமையாக கவனிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் நடத்தையில் மாற்றம் இருந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.



மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கவுன்சிலிங் வழங்க வேண்டும் எனவும் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன் அடிப்படை கணித திறனை மேம்படுத்தும் இத்திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வின் பொழுது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...