கோவை தெற்கு மண்டலம் ஈச்சனாரி பகுதிகளில்‌ புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ 97 மற்றும்‌ 100வது வார்டு பகுதிகளில்‌ 6 திட்டத்தின்‌ கீழ்‌ தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன.



புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து அங்கன்வாடி அமைப்பாளர்களிடம்‌ சாவியை வழங்கினார்கள்‌.

பின்னர் PMJVK திட்டத்தின் கீழ்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 15 எண்ணிக்கையில்‌ அங்கன்வாடி மையம் மற்றும்‌ 1 எண்ணிக்கையில்‌ பள்ளி கழிப்பிடம்‌ கட்டுவதற்கு ரூ.245 இலட்சம்‌ ஓதுக்கீடு செய்யப்பட்டது.



PMJVK திட்டத்தின் முதற்கட்டமாக வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரி மற்றும்‌ கோண்டிஸ்‌ காலனி ஆகிய இடங்களிலும்‌, வார்டு எண்‌.100க்குட்பட்ட மேட்டூர்‌, அம்மன்புதூர்‌, அன்னாபுரம்‌, கணேசபுரம்‌ மற்றும்‌ ஈஸ்வரன்‌ செட்டியார்‌ வீதி உள்ளிட்ட 5 இடங்களிலும்‌, தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ 7 இடங்களில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சி கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அப்துல்‌ காதர் ,உதயகுமார்‌, அஸ்லாம்பாஷா, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி பொறியாளர்‌ சபரிராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ பலர் கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...