அண்ணா பல்கலை.கோவை மண்டல வளாகத்தில் முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான அறிமுக விழா

மருதமலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தில் நடைபெற்ற முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான அறிமுக விழாவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தொடங்கி வைத்து அறிவுரைகளை வழங்கினார்.



கோவை: வடவள்ளி அடுத்த மருதமலை பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தில் நடப்பு கல்வியாண்டில்‌, பி.டெக்‌.செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ தரவு அறிவியல்‌, பி.இ.கணிப்பொறி அறிவியல்‌, பி.இ.தகவல்‌ தொடர்பியல்‌, பி.இ.மின்னியல்‌ பொறியியல்‌, பி.இ.இயந்திரவியல்‌ பொறியியல்‌ ஆகிய ஐந்து இளங்கலை பொறியியல்‌ படிப்புகளுக்கான வகுப்புகள்‌ தொடங்கப்பட உள்ளன.



இந்நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மரபு சார்ந்த கல்வி முறைகளுடன்‌, மாணவர்களின்‌ தனித்திழமையை வளர்த்துக்கொள்ள வழிகாட்டும்‌ “நான்‌ முதல்வன்‌” என்னும்‌ தமிழக அரசின்‌ திட்டத்தினைக்‌ குறித்தும்‌, அதன்‌ வாயிலாக பல்லாயிரக்கணக்கான மாணவா்கள்‌ பயிற்சி பெற்று வருவதையும்‌ குறிப்பிட்டார்‌. மேலும் இனி வரும்‌ 25 ஆண்டுகள் இந்தியாவிற்கான ஆண்டுகளாக உலக அரங்கினுள்‌ அமையும்‌ என்றும் பிரதாப் நம்பிக்கை தெரிவித்தார்‌.



வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிகழ்வு நிரலில், இன்றைய தொழல்யுகத்தின் பல்வேறு பரிமாணங்களை முன்னிறுத்தி,பன்முகக்‌ கண்ணோட்டத்தில்‌ நடத்தப்படவுள்ளது.தமிழகத்தின்‌ புகழ்‌ பெற்ற பேச்சாளர்கள்‌ மற்றும்‌ வல்லுநாகள்‌,இதில் பங்கேற்று தொழில்நுட்பம்‌ முதல்‌ சூழலியல்‌ வரையிலான களங்களைப்‌ பற்றிய ஆழ்நோக்கினை மாணவர்களுக்கு வழங்க உள்ளனர்.



இந்நிகழ்ச்சியில்‌ அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தின் முதன்மையர்‌ பேராசிரியர்‌ முனைவர்‌.சரவணக்குமா, தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர்‌ ஓசை காளிதாச, கோவை ரூட்ஸ்‌ நிறுவன இயக்குநர்‌ டாக்டர்.கவிதாசன், பேராசிரியா்‌ முனைவர் மாஷல்‌ அந்தோணி, முனைவர்‌ எஸ்‌.என்‌.மகாலட்சுமி மற்றும்‌ மண்டல வளாகத்தின்‌ பேராசிரியர்கள்‌, நிர்வாக அலுவலர்கள்‌, மாணவ, மாணவிகள்‌ மற்றும்‌ பெற்றோர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...