கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வன திருவிழாவில் 2022 மரக்கன்றுகள் நடப்பட்டன

கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வனத்திருவிழாவில் வனத்திறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்றார் . மேலும், வனத்திருவிழாவை சிறப்பிக்கு வகையில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளத்தைக் காக்கும் வகையில் நாக்குபெட்டா அமைப்பின் சார்பில் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். நாக்குபெட்டா அமைப்பின் நிறுவனர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஜெயபிரகாஷ் பெள்ளி, இந்திய நிலக்கரி கழக இயக்குநர் மற்றும் இந்திய தேயிலை வாரிய உறுப்பினருமான ராஜேஷ் சந்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கக்குச்சி கிராமப் பகுதிகள் மற்றும் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 2022 சோலை மர நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.



இப்பேரணியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இறுதியாக படுகர் இன மக்கள் ஒன்றாககூடி தங்களது கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். இதில் கிராம மக்கள், அரசுத் துறை அலுவலர்கள், நாக்குபெட்டா அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...