கோவையில் உறவினர்களால் கைவிடப்பட்ட இறந்தவரின் உடலை மனிதாபிமான அடிப்படையில் அடக்கம் செய்த தலைமை காவலர்

கோவை அருகே உறவினர்களால் கைவிடபட்டு இறந்தவரின் உடலை தலைமை காவலர் ஒருவர் அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கணுவாய் பகுதியை சேர்ந்தவர் லத்தீப் கட்டிட வேலை செய்து வந்த இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரைஇரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் அவரும் திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றுவிடார். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு லத்தீப்பின் 2-வது மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

தனியாக இருந்த லத்தீப் குடிபழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பல பகுதிகளில் சுற்றி திறிந்த வந்த அவர், இறுதியாக பன்னிமடையில் உள்ள கோவில் வளாகம், பேருந்து நிறுதத்தம் ஆகிய இடங்களில் இரவு படுத்துக் கொள்வதும் பகல்நேரங்களில் கோவில்களில் கொடுக்கும் உணவுடன் பொது மக்களிடமும் உதவி கேட்டு சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு பன்னிமடை பேருந்து நிறுத்த நிழல் குடையில் படுத்திருந்த இவர்இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற தடாகம் போலீசார் லத்தீப்பின் உடலை கைபற்றிஅவரது மகளை தொடர்பு கொண்டுஇறந்த தகவலை சொல்லியுள்ளனர். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இறந்து போன லத்தீப்பின் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்ய வசதி இல்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது.



இறந்த பிறகும் கைவிடபட்ட நிலையில் இருந்த லத்தீப்பின் உடலை இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்ய தடாகம் தலைமை காவலர் கிருஷ்ணன் முடிவெடுத்தார். அதனடிப்படையில் லத்தீபின் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளார். அவரது இந்த மனிதாபிமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...