கோவை டூ நேபால் விழிப்புணர்வு பயணம் - பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க இரு சக்கர பிரச்சார பயணம்

6 இரு சக்கர வாகனங்களில், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த 7000 கி.மீ பிரச்சார பயணமானது, கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடைய உள்ளது.



கோவை: பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் செக்கியூரிட்டி நிறுவனம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பயணமானது, 6 இரு சக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடையும். 14 நாட்கள் தொடரும் இந்த வாகன பிரச்சாரமானது, மொத்தம் 7000 கிமீ தூரத்தை கடந்து, செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தன்னார்வலர் மற்றும் சைபர் கிரைம் கன்சல்டன்ட் சங்கர் சுப்ரமணியன், தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, ஃபோன் செயலி மூலம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனடிப்படையில், விழிப்புணர்வு பதாகை மற்றும் துண்டு சீட்டு பிரசுரம் செய்து கோவையில் இருந்து நேபால் வரை பயணிக்க உள்ளோம். 7000 கி.மீ பயண வழியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு என்பது மிக முக்கியம். எந்தந்த செயலிகளை பயன்படுத்தக் கூடாது, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் போது கவனிக்க வேண்டியவை, புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டு நபர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்ளாமல், தைரியமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க பெண்கள் முன்வர வேண்டும். இவை அனைத்தையும் பெண்களுக்கு எடுத்துக்கூற, இது போன்ற விழிப்புணர்வு நிகழ்சிகள் அவசியம் என்று போலிஸ் தரப்பில் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...