கோவை டூ நேபால் விழிப்புணர்வு பயணம் - பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க இரு சக்கர பிரச்சார பயணம்

6 இரு சக்கர வாகனங்களில், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த 7000 கி.மீ பிரச்சார பயணமானது, கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடைய உள்ளது.



கோவை: பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் செக்கியூரிட்டி நிறுவனம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பயணமானது, 6 இரு சக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடையும். 14 நாட்கள் தொடரும் இந்த வாகன பிரச்சாரமானது, மொத்தம் 7000 கிமீ தூரத்தை கடந்து, செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தன்னார்வலர் மற்றும் சைபர் கிரைம் கன்சல்டன்ட் சங்கர் சுப்ரமணியன், தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, ஃபோன் செயலி மூலம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனடிப்படையில், விழிப்புணர்வு பதாகை மற்றும் துண்டு சீட்டு பிரசுரம் செய்து கோவையில் இருந்து நேபால் வரை பயணிக்க உள்ளோம். 7000 கி.மீ பயண வழியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு என்பது மிக முக்கியம். எந்தந்த செயலிகளை பயன்படுத்தக் கூடாது, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் போது கவனிக்க வேண்டியவை, புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டு நபர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்ளாமல், தைரியமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க பெண்கள் முன்வர வேண்டும். இவை அனைத்தையும் பெண்களுக்கு எடுத்துக்கூற, இது போன்ற விழிப்புணர்வு நிகழ்சிகள் அவசியம் என்று போலிஸ் தரப்பில் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...