கோவையில் நோ பார்க்கிங்கில் நின்ற வாகனங்களுக்கு பூட்டு, ரூ.500 அபராதம் - போக்குவரத்து போலீசார் அதிரடி!

கோவை ரயில் நிலைய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக, நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து போலீசார், ரூ.500 அபராதமும் விதித்தனர்.


கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் தினம் தினம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முக்கிய சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் முக்கிய சாலைகளில் நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுவது மட்டுமல்லாது, டிராபிக்கை கட்டுப்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்று கோவை ரயில் நிலைய சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களின் பின் பக்க சக்கரத்தில் இரும்பினால் ஆன காப்பை பூட்டி வைத்தனர்.



இதையடுத்து போக்குவரத்து போலீசார், அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்தனர். மேலும் இதுபோன்ற நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று பொதுமக்களுக்கு எச்சரித்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...