திருப்பூரில் ஆளுநருக்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஆளுநருக்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில், தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர் என்.ரவி தொடர்ந்து தமிழ்நாட்டின் மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார்.



தமிழக சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிடாமல், ஆளுநர் உரையைப் படித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



இதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்தியத் தேசிய காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...