'உள்ளாட்சித் தேர்தலில் திமுக தில்லுமுல்லு செய்துதான் வெற்றி பெற்றது..!' - எம்எல்ஏ எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்துதான் திமுக வெற்றி பெற்றது. இதை நான் சட்டசபையில் ஸ்டாலின் முன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினேன். வரும் தேர்தல்களில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்று கோவையில் அதிமுக எம்எல்ஏ வேலுமணி பேச்சு.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.



கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகரக் கழக செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். நகர அம்மா பேரவை செயலாளர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பிஆர்ஜி அருண்குமார் முன்னிலை வகித்துப் பேசினார்.



சிறப்பு விருந்தினராக அதிமுக தலைமை கழக செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.



அப்போது பேசிய அவர், அம்மா ஆட்சியில் தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, அம்மா உணவகம், மற்றும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் இன்றும் வீடுகளில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவை அனைத்தும் தந்தவர் அம்மா தான்.



இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் சாலைகளும், பாலங்களும் அமைத்தது அதிமுக ஆட்சியில் தான். நாம் துவங்கிய பாலங்களைத் தான், இவர்கள் துவக்கி வைக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்துதான் திமுக வெற்றிபெற்றது.வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்துதான் திமுக வெற்றி பெற்றது. இதை நான் சட்டசபையில் ஸ்டாலின் முன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினேன்.



வரும் தேர்தல்களில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்றார். இந்த நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர் மனோஜ் குமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் கலை முரசு காசிநாதன் ஆகியோர் பேசினர்.



முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன், ஏ கே செல்வராஜ் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ ஓ.கே சின்ராஜ், ஊராட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...