திருப்பூர் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் - ரூ.74.39 லட்சம் விற்பனை

திருப்பூர் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான மறைமுக ஏலத்தில், 970.76 குவிண்டால் அளவிலான பருத்தி ரூ.74.39 லட்சத்துக்கு வியாபாரிகள் ஏலம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த 327 விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், பங்கேற்றனர்.

இந்த மறைமுக ஏலத்தில் பருத்திக்கான அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,662-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், குறைந்தபட்ச விலையாக ரூ.6,400க்கும், சராசரி விலை ரூ.7,900க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலத்தில், 2945 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 970.76 குவிண்டால் அளவிலான பருத்தி, 74 லட்சத்து 39ஆயிரத்து 959 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இந்த மறைமுக ஏலத்தில் 9 வியாபாரிகள் கலந்து கொண்டதாக திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...