உடுமலையில் ஏப்.2-வது வாரத்தில் கரும்பு அரவைப் பணி தொடக்கம் - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணிகள் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்களை பராமரிப்பு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு எந்திரங்கள் பழுது காரணமாக கரும்பு விவசாயிகளிடம் இருந்து முழு அளவில் கரும்பை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கரும்பு அரவை பணியை தொடங்க வேண்டும்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கரும்பு அரவை தொடங்கும் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறும்போது, 'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.



இன்னும் 200 ஏக்கர் பதிவு செய்யப்பட உள்ளது. 62 ஆண்டுகள் பழமையான ஆலையில் எந்திரங்கள் பழுதடைந்துள்ளது. ரூ.10 கோடியில் எந்திரங்கள் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. கரும்பை எந்திரத்தில் தள்ளுவதற்கு எந்திர உதவி மேம்படுத்தப்பட்டு உள்ளது.

மார்ச் மாதத்துக்குள் இந்த சீரமைப்பு பணிகள் அனைத்தையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் தொழிலாளர்களை முன்கூட்டியே அழைத்துவந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...