தாராபுரம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.72.54 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மொத்தம் 2790 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. 72 லட்சத்து 54 ஆயிரத்து 256 ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 264 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.



வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8650-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.6500-க்கும் சராசரி விலையாக ரூ.7850-க்கும் விற்பனையானது. விற்பனைக்கு மொத்தம் 2790 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.

அதன்படி, 920.64 குவிண்டால் பருத்திகளை, ரூ. 72,54,256/க்கு 9 வியாபாரிகள் மறைமுக ஏலம் மூலம் வாங்கினர்.

இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...