கோவை மாநகரில் சிறப்பு வாகன தணிக்கை - ஒரே நாளில் 618 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாநகரில் ஒரே நாளில் 618 பேர் மீது மோட்டர் வாகனச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தகவல்.


கோவை: கோவை மாநகரில் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கோவை மாநகரத்தில், இவ்வாண்டு வாகன விபத்துகள் நடைபெறாமல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு "விபத்தில்லா கோவை" உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, இன்று கோவை மாநகரில் 10 இடங்களில் (காளப்பட்டி ரோடு, பிளமேடு, BPL ஜங்ஷன், லட்சுமி மில் ஜங்ஷன், சரவணம்பட்டி சோதனை சாவடி, துடியலூர் ரோடு, ரத்தினம் காலேஜ் பொள்ளாச்சி ரோடு, நேரு காலேஜ் கிருஷ்ணா காலேஜ் பாலக்காடு சாலை, உக்கடம் லாரி பேட்டை) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 928 இருசக்கர வாகன ஓட்டிகளில், 618 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு. 310 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், 1899 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் (CHILDREN'S TRAFFIC PARK) உள்ள பயிற்சி மையத்தின் மூலமும், விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...