தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ பாகுபாடு பார்க்க கூடாது - சத்குரு ட்வீட்‌

தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ பாகுபாடு பார்க்க கூடாது என தென்முடியனூர்‌ சம்பவம்‌ தொடர்பாக சத்குரு ட்வீட்‌.



கோவை: தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்‌ என சத்குரு தெரிவித்துள்ளார்‌.

திருவண்ணாமலை மாவட்டம்‌ தென்முடியனூர்‌ கிராமத்தில்‌ உள்ள முத்துமாரியம்மன்‌ கோவிலுக்குள்‌ தலித்‌ மக்கள்‌ செல்ல கடந்த 80 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல்‌ இருந்தது. இதையடுத்து, அந்தப்‌ பகுதியை சேர்ந்த தலித்‌ மக்கள்‌ மாவட்ட ஆட்சிரியரிடம்‌ இது குறித்து புகார்‌ அளித்தனர்‌.

இதை தொடர்ந்து கடந்த வாரம்‌ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ காவல்துறை அதிகாரிகளின்‌ முன்னிலையில்‌ தலித்‌ மக்கள்‌ 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்‌ முறையாக முத்துமாரியம்மன்‌ கோவிலுக்குள்‌ நுழைந்து வழிபாடு செய்தனர்‌.

இச்சம்பவம்‌ தொடர்பாக சத்குரு அவர்கள்‌ தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள பதிவில்‌, “தெய்வீகமும்‌ பாகுபாடும்‌ ஒன்றாக இருக்க முடியாதவை. தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ மனிதர்களுக்கிடையே நாம்‌ பிரித்துப்‌ பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம்‌. யார்‌ தலீத்‌ யார்‌ இல்லை என்று நாம்‌ யோசிக்கவே கூடாது. தென்முடியனூருக்கு வாழ்த்துக்கள்‌” என தெரிவித்துள்ளார்‌.



ஈஷாவில்‌ உள்ள தியானலிங்கம்‌ மற்றும்‌ லிங்க பைரவியில்‌ துவக்கம்‌ முதலே அனைத்து தரப்பு மக்களும்‌ எந்த வித பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர்‌. மேலும்‌ அமாவாசை, பவுர்ணமி நாட்களில்‌ யார்‌ வேண்டுமானாலும்‌ தியானலிங்கத்திற்கு பால்‌ மற்றும்‌ தண்ணீர்‌ அபிஷேகம்‌ செய்யும்‌ வாய்ப்பும்‌ வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...