கோவையில் அதிக வட்டி தருவதாகக் கூறி பணமோசடி - எம்.எல்.எம் நிறுவன உரிமையாளர் கைது!

அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த எம்.எல்.எம் நிறுவனத்தின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வந்தது. பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தினார்.

‘முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்’என்று அவர் கூறிய ஆசை வார்த்தையை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.

இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு அசல், வட்டி எதுவும் தராமல் பாலச்சந்திரன் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே புகார்கள் தரப்பட்டிருந்தன. இந்த நிலையில், எஸ்.கே.எம்., டிரேடர்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பீளமேடு நேரு நகர் நான்காம் மேற்கு வீதியை சேர்ந்த கணேசன்(வயது 51) என்பவர் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதில், எஸ்.கே.எம். டிரேடர்ஸ் நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அதற்கு அசல், வட்டி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரித்த காவல்துறையினர், பாலச்சந்திரன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவுசெய்து, நிதி நிறுவன உரிமையாளர் பாலச்சந்திரனை கைது செய்தனர்.

மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...