மேட்டுப்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்தில் கேஸ் கசிவு - மூச்சுத் திணறால் ஏற்பட்டு பொதுமக்கள் மயக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென குளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மயக்கமடைந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, அங்குள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு,33 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அப்படி சுத்திகரிப்பு செய்யும் போது தண்ணீரினை சுத்தம் செய்ய குளோரின் சரியான விகிதத்தில் நகராட்சி ஊழியர்களால் கலக்கப்படும். அந்த வகையில், இன்று காலை தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய குளோரின் சிலிண்டரை அங்குள்ள ஊழியர்கள் திறந்தபோது, அது பயங்கர சப்தத்துடன் வெடித்து குளோரின் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.



இதனால், அங்கு குடியிருக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிலர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மயக்கமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாயுக் கசிவினைசரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அடிக்கடி சிறிய அளவில் வாயுக் கசிவு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது பெரிய அளவில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஏற்பட்டுள்ளதாகவும், நகராட்சி ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள்கூட வழங்கவில்லை எனவும்கூறி அந்த பகுதி மக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...