மேட்டுப்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்தில் கேஸ் கசிவு - மூச்சுத் திணறால் ஏற்பட்டு பொதுமக்கள் மயக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென குளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மயக்கமடைந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, அங்குள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு,33 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அப்படி சுத்திகரிப்பு செய்யும் போது தண்ணீரினை சுத்தம் செய்ய குளோரின் சரியான விகிதத்தில் நகராட்சி ஊழியர்களால் கலக்கப்படும். அந்த வகையில், இன்று காலை தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய குளோரின் சிலிண்டரை அங்குள்ள ஊழியர்கள் திறந்தபோது, அது பயங்கர சப்தத்துடன் வெடித்து குளோரின் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.



இதனால், அங்கு குடியிருக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிலர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மயக்கமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாயுக் கசிவினைசரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அடிக்கடி சிறிய அளவில் வாயுக் கசிவு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது பெரிய அளவில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஏற்பட்டுள்ளதாகவும், நகராட்சி ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள்கூட வழங்கவில்லை எனவும்கூறி அந்த பகுதி மக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...