‘யக்‌ஷா’ 2ஆம்‌ நாள்‌ விழா - மக்களை பரவசத்தில் ஆழ்த்திய சஷாங்கின் புல்லாங்குழல்‌ இசை!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் ‘யக்‌ஷா’ கலை திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 2ஆம் நாளான இன்று, 'செவாலியே' விருது வென்ற சஷாங்க்‌ தனது புல்லாங்குழல்‌ இசையால்‌ மக்களை பரவசத்தில்‌ ஆழ்த்தினார்‌.


கோவை: ஈஷாவின்‌ 'யக்‌ஷா' கலைத்‌ திருவிழாவில்‌ 'செவாலியே' விருது வென்ற சஷாங்க்‌ தனது புல்லாங்குழல்‌ இசையால்‌ மக்களை பரவசத்தில்‌ ஆழ்த்தினார்‌.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கலைகளை பறைச்சாற்றும்‌ 'யக்‌ஷா' கலை திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில்‌ நடைபெற்று வருகிறது. இரண்டாம்‌ நாளான இன்று (பிப்‌.16) பிரபல புல்லாங்குழல்‌ இசை கலைஞர்‌ சஷாங்க்‌ சுப்ரமணியத்தின்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த அற்புதமான நிகழ்ச்சியில்‌ அவர்‌ தனது இனிய குழல்‌ இசையால்‌ மக்களை மகிழ்வித்தார்‌. அவருடன்‌ பத்ரி சதீஷ்‌ குமார்‌ மிருதங்கமும்‌, கிரீதர்‌ உடுப்பா கடமும்‌ இசைத்தனர்‌.



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள்‌ மற்றும்‌ நாடுகளைச்‌ சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள்‌ கண்டு ரசித்தனர்‌.

சஷாங்க்‌‌ குடியரசு தலைவரிடம்‌ இருந்து சங்கீத்‌ நாடக அகாடமி விருது, பிரான்ஸ்‌ நாட்டின்‌ செவாலியே விருது, தமிழக அரசின்‌ கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள்‌ மற்றும்‌ பாராட்டுக்களை பெற்றவர்.

'யக்‌ஷா' திருவிழாவின்‌ நிறைவு நாளான நாளை (பிப்.17) மாதவி முத்கல்‌ குழுவினரின்‌ ஒடிசி நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள்‌ கூர்யகுண்டம்‌ மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 6.50 மணி முதல்‌ 8.30 மணி வரை நடைபெற உள்ளது.‌ இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...