‘யக்‌ஷா’ 2ஆம்‌ நாள்‌ விழா - மக்களை பரவசத்தில் ஆழ்த்திய சஷாங்கின் புல்லாங்குழல்‌ இசை!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் ‘யக்‌ஷா’ கலை திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 2ஆம் நாளான இன்று, 'செவாலியே' விருது வென்ற சஷாங்க்‌ தனது புல்லாங்குழல்‌ இசையால்‌ மக்களை பரவசத்தில்‌ ஆழ்த்தினார்‌.


கோவை: ஈஷாவின்‌ 'யக்‌ஷா' கலைத்‌ திருவிழாவில்‌ 'செவாலியே' விருது வென்ற சஷாங்க்‌ தனது புல்லாங்குழல்‌ இசையால்‌ மக்களை பரவசத்தில்‌ ஆழ்த்தினார்‌.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கலைகளை பறைச்சாற்றும்‌ 'யக்‌ஷா' கலை திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில்‌ நடைபெற்று வருகிறது. இரண்டாம்‌ நாளான இன்று (பிப்‌.16) பிரபல புல்லாங்குழல்‌ இசை கலைஞர்‌ சஷாங்க்‌ சுப்ரமணியத்தின்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த அற்புதமான நிகழ்ச்சியில்‌ அவர்‌ தனது இனிய குழல்‌ இசையால்‌ மக்களை மகிழ்வித்தார்‌. அவருடன்‌ பத்ரி சதீஷ்‌ குமார்‌ மிருதங்கமும்‌, கிரீதர்‌ உடுப்பா கடமும்‌ இசைத்தனர்‌.



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள்‌ மற்றும்‌ நாடுகளைச்‌ சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள்‌ கண்டு ரசித்தனர்‌.

சஷாங்க்‌‌ குடியரசு தலைவரிடம்‌ இருந்து சங்கீத்‌ நாடக அகாடமி விருது, பிரான்ஸ்‌ நாட்டின்‌ செவாலியே விருது, தமிழக அரசின்‌ கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள்‌ மற்றும்‌ பாராட்டுக்களை பெற்றவர்.

'யக்‌ஷா' திருவிழாவின்‌ நிறைவு நாளான நாளை (பிப்.17) மாதவி முத்கல்‌ குழுவினரின்‌ ஒடிசி நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள்‌ கூர்யகுண்டம்‌ மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 6.50 மணி முதல்‌ 8.30 மணி வரை நடைபெற உள்ளது.‌ இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...