தாராபுரத்தில் பருத்தி மறைமுக ஏலம் - ரூ.1.38 கோடிக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு சராசரி விலையாக ரூ.8050-க்கு விற்பனையானது. மொத்தம் 176.728 குவிண்டால் பருத்தியானது ரூ.1.38 கோடிக்கு ஏலம் போனது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை மறைமுக ஏலம் மூலம் நடைபெற்றது. இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 547 விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல், பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் வந்திருந்தனர். மறைமுக ஏலத்தில் பங்கேற்ற வணிகர்கள், பருத்தியை அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8699-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 6850-க்கும் சராசரி விலையாக ரூ. 8050-க்கும் ஏலம் எடுத்தனர்.

இந்த வார ஏலத்திற்கு 5, 464 மூட்டை பருத்திகள் வந்திருந்தன. 176.728 குவிண்டால் பருத்தியானது ரூ.1,38,99,520க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் 15வியாபாரிகள் மறைமுக பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனர். இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...