கோவை சுந்தராபுரத்தில் குப்பைமேடாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்கா!

கோவை சுந்தராபுரம் அருகே செயல்பட்டு வரும் சிறுவர் பூங்காவில் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில், உடனடியாக குப்பைகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே குப்பைமேடாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுந்தராபுரம் அடுத்த மதுக்கரை சாலையில் உழவர் சந்தை அருகே சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு செல்வது வழக்கம்.

மேலும் அதிகாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை நடைப்பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதுதவிர மாலை நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

இந்த நிலையில் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பது அங்கு வரும் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் இலைகள், காய்ந்து சருகுகளாக ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சுந்தராபுரம் பகுதியை பொறுத்தவரை பொழுது போக்குவதற்கு என்று குறிப்பிட்ட இடம் கிடையாது. இந்த ஒரு பூங்கா மட்டுமே உள்ளது.

ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியலாக காட்சி அளிக்கிறது. இங்கு வாரத்திற்கு ஒரு முறை தான் குப்பைகளை அகற்றுகின்றனர். குப்பைகள் தேங்கும் காரணத்தால் பூங்காவிற்குள் கொசுக்கள் அதிகரித்துள்ளது, என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...