கோவை பேரூர் பட்டிஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா - விடிய விடிய சிறப்பு பூஜை!

கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.



கோவை: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மின்னொளியில் ஜொலித்தது.

இந்து அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 5 சிவாலயங்களில் சிவராத்திரியைச் சிறப்புப் பூஜை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வர் திருத்தலத்தில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய பக்தர்களின் பரவசம் விடிய விடிய நீடித்து இன்று காலை 6 மணி வரை தொடர்ந்தது.

சிவராத்திரி நிகழ்வில், இரவு 9 மணி முதல் 11 மணி வரை முதற்கால பூஜை, 11 மணி முதல் நள்ளிரவு 1மணி வரை இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு1 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் 4.30 நான்காம் கால பூஜை நடைபெற்றது.

சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசை, தவில் இசை, நாதஸ்வரம் இசைக்கப்பட்டன. மாலை 6.15 மணிக்கு கோவை மாவட்ட திருக்கோவில் ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பம் நடந்தன.

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு குத்துவிளக்கேற்றி விழா ஆரம்பமானது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாலச் அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோர் ஆன்மிக அருளுரை வழங்கினார்.



இரவு 7.15 மணிக்கு வழுவூர் பழனியப்பன் குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும்.



இரவு 7.45 சிவகண வாத்திய குழுவினர் கயிலை வாத்தியமும் நடந்தது. இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் தலைமையில் பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் பெண்களா?, ஆண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

இரவு 9.30 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் கானா உலகநாதன், தஞ்சை நாட்டுப்புற பாடகி செல்வி, டி.வி.சண்முகம் வழங்கும் கோவை பிரியா இசைக்குழு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு 11.30 நண்பர்கள் கலைக்குழு ஸ்ரீதர் தலைமையில் வெங்கலம், பம்பை, காவடி, கை சிலம்பாட்ட கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது.



இரவு 12.30 மணிக்கு சென்னை சாய் நிருத்தியாலயா வழங்கும் அரணும், அங்கயற்கண்ணியும் நாட்டிய நாடகம், அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சுசித்ரா குழுவின் பக்தி இன்னிசை, இரவு 2.30 மணிக்கு திருப்பூர் மூலனூர் சாந்தகுமாரின் மின்னல் கிராமியக் கலைக் குழு பறை இசை, தீ விளையாட்டு, அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை சூப்பர் சிங்கர் ராஜ கணபதி, சரத் சந்தோஷ், தீப்தி சுரேஷ், ஸ்ரீஷா பாட்டுக்கச்சேரி ஆகியன பேரூர் சாந்தலிங்க அடிகளார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.



சிவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தீப விளக்குகள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.



இந்த நிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பட்டீஸ்வரர் கோயில் திருத்தலமே வண்ண விளக்கால் ஜொலித்தன.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...