தாராபுரம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் - ரூ.1.05 கோடிக்கு விற்பனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒரு கோடியே 5 லட்சத்து 6723 ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது. 4360 பருத்து மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவைமாவட்டங்களை சேர்ந்த 422 விவசாயிகள், பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ. 8658 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 6900க்கும், சராசரி விலையாக ரூ.7850-க்கும் விற்பனையானது.

விற்பனையான பருத்தியின்மொத்த அளவு 4360 மூட்டைகள், குவிண்டால் அளவு 1373.37. இவற்றின் ரூபாய் மதிப்பு 1,05,06,723/-. இந்த மறைமுக ஏலத்தில் 15 வியாபாரிகள் பங்கேற்றதாக முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...