கோவையில் ஆம்புலன்சிலேயே இளம்பெண்ணுக்கு பிரசவம் - பூமிக்கு வந்த அழகான தேவதை!

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண் ஷிவானிக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்ததால் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஊழியர்களே பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது.


கோவை: கோவை சுந்தராபுரம் அருகே பிரசவ வலியில் துடித்த இளம் பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாகுமார். இவரின் மனைவி ஷிவானி (22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது.

இதனால் மிகுந்த வலியில் துடித்த அவரை, 108 ஆம்புலன்சில் ஏற்றி கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், உக்கடம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது ஷிவானிக்கு வலி அதிகரித்தது.

குழந்தையின் தலை வெளியே வந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ நிபுணர் தமிழ்செல்வம் சாலையோரத்தில் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு பைலட் கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் பிரசவம் பார்த்தார்.

அப்போது ஷிவானிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் பிரசவ அவசரம் உணர்ந்து விரைந்து செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...