மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கார் மெக்கானிக் அசோக்குமாரிடம் 9 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த பிரசாந்த் உத்தமன் என்ற நபரை கோவை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சார்ந்தவர் அசோக் குமார்(வயது30). இவர் கார் மெக்கானிக்காக ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு அறிமுகமான நபர் ஒருவர், பிரசாந்த் உத்தமன் என்ற நபரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிரசாந்த் உத்தமன் ஸ்கவுட் பிரிவில் மாநில அளவில் உயர் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்து அறிமுகப்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறை ஒன்றில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை காலியாக இருப்பதாகவும், அதனை வாங்கி தருவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதற்காக பணம் செலவாகும் என்று தெரிவித்த பிரசாந்த் உத்தமன், அசோக் குமாரிடம் இருந்து 2020 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை கிடைத்தது போன்ற போலி பணி ஆணையை பிரசாந்த் உத்தமன் ஏற்பாடு செய்து, அசோக்குமாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த பணி ஆணை போலி என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரசாந்த் உத்தமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...