வாயில்லா ஜீவன்களுக்காக கோவை மாநகர காவல்துறை எடுத்த முயற்சி!

கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் தன்னார்வ அமைப்புகள் இணைந்து காவல் நிலையங்களின் மேற்கூரைகளில் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதற்கு ஏதுவான மண் குவளைகள் வழங்கும் நிகழ்வு, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மண் குவளைகளை காவல் ஆய்வாளர்களிடம், ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.



கோவை: கோடை காலத்தையொட்டி காவல் நிலைய மேற்கூரைகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கான மண் மண் குவளைகளை காவல் ஆய்வாளர்களிடம், ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து காவல் நிலையத்தின் மேற்கூறையில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு ஏதுவான மண் குவளைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா, ராயல் செயின், நேச்சர் அனிமல் கன்வரன்சி, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மாநகர போலீசாருக்கான 100 மண் குவளைகளை வழங்கினர்.



மேலும் இந்த அமைப்பினர் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொது இடங்களில் தண்ணீர் குடிப்பதற்கான மண் குவளைகள் வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பகுதியில் பறவைகளுக்கு கோடைக்காலத்தில் தண்ணீர் வைப்பதற்கான திட்டத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கோடைக்காலத்தை முன்னிட்டு இந்த பணியைச் செய்வதாகவும், பறவைகளுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் தண்ணீர் அத்தியாவசியம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...