ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்..! - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.


சென்னை: நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 65,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே நேற்றைய தினம் (15.03.2023) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...