கோவை 22வது வார்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

கோவை மாநகராட்சியின் 22வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் TURIF - 2022-23 திட்டத்தின் கீழ் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளில் தார்சாலை புதுப்பித்தல் பணிகளை மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 22வது வார்டில் தார்ச்சாலை புதுப்பித்தல் பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 22 ஆவது வார்டு குமுதம் நகரில் உள்ள பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளுக்கு TURIF - 2022-23 திட்டத்தின் கீழ், தார் சாலை புதுப்பித்தல் பணிகள் துவக்க விழா நேற்றைய தினம் (25.03.2023) நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில், கவுண்டம்பாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அசோக் பாபு, 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு,

6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, 5 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, 22 வது வார்டு வட்டச் செயலாளர் பிரபாகரன், 8 வது வார்டு வட்டச் செயலாளர் வினோத் குமார், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், 22 வது வார்டு அவைத் தலைவர் ஆனந்த குமார், துணை ஆணையாளர் முத்துராமலிங்கம், சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜெரால்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...