உடுமலை சுற்றுவட்டாரத்தில் கன மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் காலை முதல் விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை மாற்றம், சீதேஷ்ண நிலை காரணமாக மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.



இந்நிலையில் இன்று காலை முதல் உடுமலை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்தது. தற்போது இடைவிடாமல் கன மழை பெய்து வருவதால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது,



வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே ஓரமாக நிறுத்தி மழையில் நனையாதபடி வணிக வளாகங்களில் தஞ்சமடைந்தனர். இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...