உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி ஜிட்டோ பெண்கள் அமைப்பினர் அஹிம்சா மாரத்தான்

உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி கோவையில் ஜிட்டோ பெண்கள் அமைப்பு சார்பில் 3 பிரிவுகளில் நடைபெற்ற அஹிம்சா மாரத்தான் போட்டியில் ராணுவம், காவல்துறை, ஆண்கள், பெண்கள் என ஜாதி, மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி கோவையில் ஜிட்டோ பெண்கள் அமைப்பு சார்பில் அஹிம்சா மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

உலகம் முழுவதும் 22 நாடுகளிலும், இந்தியாவில் 65க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக அஹிம்சா மராத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும், அமைதியை வலியுறுத்தியும் அஹிம்சா மாரத்தான் நடைபெற்றது.



முழுவதும் பெண்கள் ஒருங்கிணைத்த இந்த மாரத்தானை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மூன்று, ஐந்து, பத்து கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த ராணுவத்தினர், காவல் துறையினர் உட்பட வயது வித்தியாசம், ஜாதி, மதம் ஆண் பெண் என்று எந்தவித வித்தியாசமும் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

கோவையில் நடைபெற்ற ஜிட்டோ அகிம்சா மாரத்தான் போட்டியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...