பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமா நடைபெற்றது. இந்த நிகழ்வில், பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியவாரு அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய பக்தர்களை கண்டு பார்வையாளர்கள் பிரமிப்பு.


கோவை: பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிவரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 27ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.



அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி கோவிலுக்கு வரும் நிகழ்வு நடைபெற்றது.



பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடலில் பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி பறவை காவடி, வேல் காவடி, மயில் காவடி,போன்ற விதவிதமான அலங்கார வளைவுகளில் அமர்ந்தும், அந்தரத்தில் தொங்கிய படியும், கிரேன் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



திருவள்ளுவர் திடலில் தொடங்கிய இந்த ஊர்வலமானது வெங்கட்ரமணன் வீதி, உடுமலை சாலை கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உறவினர்கள் நண்பர்களுடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அந்தரத்தில் தொங்கிவாரு விதவிதமாக அலகு குத்திக் கொண்டு ஊர்வலமாக வந்ததைக் கண்டு பொதுமக்கள் பிரம்மிப்படைந்தனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...