கே.ஜி பவுண்டேஷன் சார்பில் ஆளுமை விருது வழங்கும் விழா - தமிழக ஆளுநர் பங்கேற்பு

கே.ஜி மருத்துவமனையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, Dynamic Indian of Millenium, Personality of the Decade என இரண்டு விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த 11 ஆளுமைகளுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கினார்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி. அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

கோவை கே.ஜி மருத்துவமனை மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல் உள்ளிட்ட கே.ஜி குடும்ப நிறுவனங்கள் சார்பில் கே.ஜி பவுண்டேஷன் அமைப்பில் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி கே.ஜி மருத்துவமனையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'Dynamic Indian of Millenium', 'Personality of the Decade' என இரண்டு விதமான விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த 11 ஆளுமைகளுக்கு விருதுகள் இந்தாண்டு வழங்கப்பட்டது.

கே.ஜி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர்.ஜி.பக்தவச்சலம், கே.ஜி மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...