கோவையில் அவதூறு வழக்கில் கைதான பாஜக நிர்வாகி - ஏப்.26ம் தேதிவரை நீதிமன்றக் காவல்!

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக பாஜக தொழில்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் 26 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து சமூகவலைதள பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட பாஜக பிரமுகர் செல்வகுமார், வரும் 26-ஆம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையை சேர்ந்த பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் என்பவர், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து. அவரது பதிவுக்கு பல்வேறு பதில் பதிவுகள் வெளியான நிலையில் திமுகவை சேர்ந்த ஐ டி விங் நிர்வாகிகள் அடுத்தடுத்து புகார் அளிக்கத் தொடங்கினர். அதில் திமுக ஐடி விங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் என்பவர் பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மார்ச் 6ஆம் தேதி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை செல்வகுமார் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக, கணபதியை சேர்ந்த திமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார் அடிப்படையில் மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று செல்வகுமாரை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட நிலையில் மாலையில் கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 26 ஆம் தேதி வரை செல்வகுமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பாஜக நிர்வாகி செல்வகுமார், அவதூறான கருத்துக்களை ட்விட்டர் மூலம் பதிவு செய்வதால் அவருக்கு பதில் அளிக்க மற்ற அரசியல் கட்சியினரும் அவதூறான கருத்துக்களை பதிவிடுவதால் தேவையற்ற வன்முறைகள் உருவாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...