பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.



இந்த கூட்டத்தில் பொள்ளாச்சியின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை சார் ஆட்சியர் பிரியாங்காவிடம் தெரிவித்தனர்.



பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள பத்து கிராமங்களில் இருக்கும் மொத்த கழிவு நீரும் அருகில் இருக்கும் பல ஏக்கர் விளை நிலத்தில் தேங்கி நிற்பதால் கிணற்று நீர் மாசடைவதாகவும், கால்நடைகள் நோய்வாய்படுவதாகவும், அங்கு உள்ள தென்னை மரங்கள் பட்டுபோவதாகவும், அருகில் உள்ள கிராம மக்கள் வியாதிகளுக்கு உள்ளாவதாகவும் கூறி சார் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென கூட்ட அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு முறை விவசாய குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனவும் மழை காலம் துவங்கினால் மீண்டும் விளை நிலத்தில் கழிவு நீர் புகுந்து சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் உடனே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இதை விசாரித்த சார் ஆட்சியர் பிரியங்கா போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...