தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் மே தின ஊர்வலம்!

மே தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் திருப்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

மே 1ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பாக திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மே தின தொழிலாளர் பேரணி நடைபெற்றது.



இதில் பாட்டாளி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மே தின முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.



பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் தொழிலாளர்களுக்கு ஆறு மணி நேர வேலையாக சமமாக மாற்றக்கோரியும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான இ எஸ் ஐ, பி எப் பிடித்தம் செய்வதை உறுதி செய்துவிட வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள தொழிலாளர்களை 14 மணி நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வெளிமாவட்டத்திலிருந்து திருப்பூருக்கு வந்து தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மே தின ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சங்கர், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...