துடியலூரில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மார்ட்டின் குழும நிறுவன அலுவலகங்கள் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளா, சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சில நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலங்களில் நடைபெற்று வரும் லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மார்ட்டின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த சில ஆண்டுகளில் 2 முதல் 3 முறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்நிலையில் மீண்டும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் உள்ள மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



முன்னதாக கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை வெள்ளகிணறு பிரிவு பகுதியில் உள்ள அவரது வீடு ஆகியவற்றிலும் தனித்தனியே அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் உதவியுடன் இந்த மூன்று இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையின் காரணமாக வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெளி ஆட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...