கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து வரும் மார்ச் 14ம் தேதியன்று கலைமகள் கலைக் கல்லூரி வளாகத்தில் தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்று வேலை வழிகாட்டும் கையேட்டினை வெளியிட உள்ளார்.

இத்தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விகள் தொடர்பான விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் வல்லுநர்களால் இவ்விவரங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

வேலைவழிகாட்டி கையேட்டில் உயர்கல்வி பற்றிய விவரங்கள், கல்விக்கான உதவி தொகை பெறுதல், உயர்கல்வி வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, எந்த வேலைவாய்ப்பு பெற என்ன கல்வித் தகுதி தேவை என்பது பற்றிய விவரங்கள் முப்படைகளில் சேர என்ன கல்வித் தகுதி, அதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் போட்டி தேர்வுகள் பற்றிய விவரங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய இணையதள முகவரிகள் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொதுவாக வாழ்வில் முன்னேற உரிய தகவல்கள் அளிக்கப்படுகிறது.

எனவே, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...