கோவை ஈஷா யோகா மையத்தில் மே.30ல் பராமரிப்பு பணி - ஆதியோகி சிலை மூடப்படும் என அறிவிப்பு!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ வரும்‌ மே 30ஆம்‌ தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்‌ தியானலிங்கம்‌ மற்றும்‌ ஆதியோகி வளாகங்கள்‌ அன்றைய தினம்‌ மூடப்பட்டிருக்கும் என்பதால் பக்தர்கள்‌ அன்றைய தினம்‌ ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என ஈஷா நிறுவனம் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 30ஆம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்றைய தினம் பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்‌ உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின்‌ பல்வேறு நாடுகளில்‌ இருந்தும்‌ மக்கள்‌ வருகை தருகின்றனர்‌. குறிப்பாக, தியானலிங்கம்‌. லிங்கபைரவி மற்றும்‌ ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள்‌ தினமும்‌ வருகை தருகின்றனர். 

இந்நிலையில்‌, ஆண்டுதோறும்‌ நடைபெறும்‌ பராமரிப்பு பணிக்காக ஈஷா வளாகம்‌ வரும்‌ மே 30-ஆம்‌ தேதி ஒரு நாள்‌ மட்டும்‌ மூடப்பட உள்ளது. 31-ஆம்‌ தேதி முதல்‌ பக்தர்கள்‌ வழக்கம்போல்‌ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...