மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், கோயம்புத்தூர் அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளையும் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 345 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், 201 மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில்; அம்மா அவர்கள் துவக்கி வைத்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தொலை நோக்குப்பார்வையுடன் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஒரு நாட்டையும், ஒரு சமுதாயத்தையும் முன்னேற்றுவது கல்வி மட்டும்தான் என்பதை உணர்ந்த தமிழக அரசு, மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்ப கல்வி முதல் கல்லூரி கல்வி வரை எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் திட்டங்களனைத்தும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவை சார்ந்த துறைகளின் மூலம் உடனுக்குடன் பெற்று வழங்கப்படுகின்றது.



இன்றைக்கு 2016-17 கல்வியாண்டிற்கு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த 201 மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினுடைய நோக்கம் உலக அளவில் கல்வித்தரத்தினை கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதாகும். ஒரு காலகட்டத்தில் ஏழை மாணவ மாணவியர்களின் கனவுப்பொருளாக இருந்த மடிக்கணினியை இன்று அனைத்து மாணவ மாணவியர்களின் மடியில் தவழுகின்ற கணினியாக திகழந்திட செய்தவர் அம்மா அவர்களே. இத்திட்டத்தை பிற மாநிலங்கள் தேர்தல் காலகட்டங்களில் வெற்றிக்காக முன்னிருத்தி பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் அவர்களால் அதை தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை இன்றைக்கு இந்தியவே திரும்பி பார்க்கின்ற விதமாக அனைத்து திட்டங்களையும், முழுமையாக நிறைவேற்றி முழுவெற்றியைப் பெற்றவர் என்றால் தலைசிறந்த ஒரே தலைவர் அம்மா அவர்கள் மட்டுமே. 

அதேபோல 2016 – 17ம் ஆண்டிற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு அரசு பள்ளிகளுக்கும், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும்பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றைக்கு குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 64 மாணவ மாணவியர்களும், சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்களுக்கும், சென்னனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 97 மாணவ மாணவியர்களுக்கும், மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 89 மாணவ மாணவியர்களுக்கும்  என மொத்தம் 345 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், இதேபோல் அரசின் திட்டங்களை அனைத்து மாணவ மாணவியர்களும் பெற்று பயன்பெறுவதுடன் இப்பகுதிகளிலுள்ள மாணவ மாணவியர்கள் உயர்கல்வி வரை படிக்க வேண்டும். படிக்க வசதியில்லாத நிலையில் உள்ள மாணவர்கள் எனது (தொண்டாமுத்தூர்) சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் விண்ணப்பித்தால் கண்டிப்பாக உயர்கல்வி வரை பயில வழிவகை மேற்கொள்ளப்படும். இப்பகுதியிலிருந்து ஒவ்வொரு மாணவர்களும் எதோ ஒரு பதவியில் வரும்பொழுது நம் ஊருக்கு மட்டுமின்றி நமது தொகுதிக்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை கிடைத்திடும் என்பதை மனதில் நிலைநிறுத்தி ஒவ்வொருவரும் கடினமாக உழைத்து தேர்வுகளில் மாநில அளவில் உயர்ந்த மதிப்பெண் பெற்றிடவும், உயர்ந்த பதவிகளை பெற்றிட வேண்டும் அதுமட்டுமின்றி, அரசுப்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்குத்தேவையான உதவிகள் உடனுக்குடன் செய்து தரப்படுகிறது. அதுபோன்ற திட்டங்களையும் தேவைக்கேற்ப பெற்று பள்ளி நிர்வாகம், பயன்பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, அம்மன் கே.அர்ச்சுணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, துணை ஆட்சியர்கள் சரவணமூர்த்தி, மோகன், சுரேஷ், சென்னியப்பன், தலைமையாசிரியர்கள் தனபாக்கியம், ஜனார்த்தனன், மணிபாலா மற்றம் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...