துடியலூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் திடீர் தீ விபத்து!

கோவை துடியலூர் காவல் நிலையம் அருகே குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத் துறை மூலம் தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: துடியலூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலையம் அருகில் உள்ள சந்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



இந்த நிலையில் இன்று வாரச்சந்தை தொடங்க இருந்த நிலையில் அதிகாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செவர்லட் காரின் முன்பகுதியில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.



தீ மலமலவென எரியவே அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.



இதையடுத்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வந்த 5 தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் அங்கிருந்த குப்பைகளுக்கு யாராவது தீ வைத்து அது காரில் பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...