பாஜக கண்டுகொள்ளவில்லை..! - பேரூராட்சித் தலைவர் உட்பட 4000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் 5,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தந்த தங்களை பாஜக கண்டுகொள்ளவில்லை எனக்கூறி தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் மற்றும் 7 வார்டு உறுப்பினர்கள் உட்பட 4000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் உட்பட சுமார் 5000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவராக இருப்பவர் கண்ணம்மாள். கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் ருத்ராவதி பாஜவுக்கு ருத்ராவதியில் அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன.

இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நீண்ட நாள்களாகியும் வராததற்கு கண்டனம் தெரிவித்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் கூறியதாவது, எனது தலைமையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 5,000க்கும் அதிகப்படியான வாக்குகளை பாஜகவுக்கு பெற்று கொடுத்துள்ளோம்.

இந்தப் பேரூராட்சியில் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், கட்சித் தலைமை இதுவரை எங்களை கண்டுகொள்ளவில்லை.



அதனால், ருத்ராவதி பேரூராட்சித் தலைவர் மற்றும் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பாஜகவின் முதலாவது பேரூராட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ள 4000க்கும் மேற்பட்டோர் வேறு கட்சியில் இணைய உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...