கோவை அருகே சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து - இளம்பெண் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

பீளமேடு அருகேயுள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் பாக்கியலட்சுமி என்ற இளம்பெண் உடலில் 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வயது பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி பாக்கியலட்சுமி (35). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் பாக்கியலட்சுமியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமி தனது மகனுடன் வசித்துக் கொண்டு, அதே பகுதியில் உள்ள சாலையில் பூக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை சமையல் செய்ய சமையறைக்கு சென்ற போது, அங்கிருந்த விளக்கை ஆன் செய்ய சுவிட்சை போட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதில், பாக்கியலட்சுமி உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...