கோவை அருகே சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து - இளம்பெண் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

பீளமேடு அருகேயுள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் பாக்கியலட்சுமி என்ற இளம்பெண் உடலில் 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வயது பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி பாக்கியலட்சுமி (35). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் பாக்கியலட்சுமியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமி தனது மகனுடன் வசித்துக் கொண்டு, அதே பகுதியில் உள்ள சாலையில் பூக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை சமையல் செய்ய சமையறைக்கு சென்ற போது, அங்கிருந்த விளக்கை ஆன் செய்ய சுவிட்சை போட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதில், பாக்கியலட்சுமி உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...