கோவை அருகே சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து - இளம்பெண் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

பீளமேடு அருகேயுள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் பாக்கியலட்சுமி என்ற இளம்பெண் உடலில் 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வயது பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி பாக்கியலட்சுமி (35). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் பாக்கியலட்சுமியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமி தனது மகனுடன் வசித்துக் கொண்டு, அதே பகுதியில் உள்ள சாலையில் பூக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை சமையல் செய்ய சமையறைக்கு சென்ற போது, அங்கிருந்த விளக்கை ஆன் செய்ய சுவிட்சை போட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதில், பாக்கியலட்சுமி உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...