பல்லடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்..! வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிட்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பாய், தலையனையுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ளது செட்டிபாளையம் சாலை. பல்லடம் முதல் கொச்சின் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இதனிடையே செட்டிபாளையம் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆகிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் குடியிருப்புக்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பார் வசதி கிடையாது. இதனால் இங்கு மது வாங்குபவர்கள் சாலையிலேயே மதுவை குடித்துவிட்டு அலங்கோலமாக படுத்துக்கிடப்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தின் ஒரு கட்டமாக டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பாய் தலையணையுடன் வந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டாஸ்மாக் கடை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருகட்டத்தில் பொதுமக்கள் கேள்விகளால் துளைத்தெடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதில் சொல்லமுடியாமல் மேலாளர் திணறினார்.



பின்னர் பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்க தனக்கு அதிகாரமில்லை என அடிக்கடி பதில் தெரிவித்ததால் பொதுமக்கள் கடுப்பாகி அதிகாரமில்லாத அதிகாரியிடம் பேச்சுவார்த்தை எதற்காக நடத்த வேண்டும் என கொந்தளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...