குண்டடம் அருகே கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் கிராம மக்கள் மனு

குண்டடம் அருகே வெருவேடம்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டும் என மக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில், 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெருவேடம்பாளையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தனசெல்வி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

கிராமசபை கூட்டத்தில் கால்நடை பராரிப்பு, உள்ளாட்சி, சுகாதாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மட்டும் பங்கேற்று அவர்களின் துறை சார்ந்து பேசினர். கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில் ஏனைய 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் பெரும்பாலான அலுவலர்கள் கலந்து கொள்ளாததால் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டுகிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

அந்த மனுவை பஞ்சாயத்து தலைவர் பெற்றுக் கொண்ட நிலையில் அதற்கு பதிலளித்த அதிகாரி இந்த கருத்தை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடுத்த முறை அனைத்து துறை அலுவலர்களையும் பங்கேற்க ஏற்பாடு செய்கிறோம் என்றார்.

அதனைக் கேட்ட பொதுமக்கள் கடந்த 3 கிராமசபை கூட்டங்களிலும் இந்த விசயத்தை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கூட்டம் முடிந்ததும் அதை மறந்துவிடுகின்றனர். அதனால் இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதுபற்றி கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். கூட்டத்தை ரத்து செய்ய முடியாது என மீண்டும் அதிகாரி கூறினார்.இதனால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...