கல்லூரி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்திட வேண்டும் - கோவை காவல் துணை ஆணையர் அறிவுரை

ராக்கிங் என்பது அதிகமாக இல்லை. ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கல்லூரி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்திட வேண்டும் என கோவை காவல் துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்

கோவை பிபிஜி கல்லூரி வளாகத்தில், உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது.

இதனை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின், தனியார் கல்லூரி மாணவர் ராக்கிங் செய்து தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், கோவையில் ஏராளமான கல்லூரி இருக்கிறது. இங்கு ராக்கிங் என்பது அதிகமாக இல்லை.ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்துகல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை செய்வதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

வழக்கு பதிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் ஒருவர் மீது வழக்கு பதிவாகிவிட்டால் அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற தடையாக அமையும் என்பதால் கல்லூரி மாணவர்கள் இதுபோன்றுராக்கிங் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் ராக்கிங்க்கு எதிரான சட்டம் கடுமையாகஉள்ளதாகவும் எனவே இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...