உடுமலை அமராவதி ராணுவ பயிற்சி மாணவர் சேர்க்கை அறிவிப்பு

அமராவதியில் உள்ள அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ராணுவ பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த அமராவதியில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2024-2025 ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பதாரர்கள் https://aissee.nta.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை அடுத்த மாதம் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 6 மற்றும் 9-ம் வகுப்பில் பெண்களுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது. 6-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சேர்க்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது குறித்த முழுமையான விவரங்களை nta.ac.in; https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...