உடுமலையில் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகளை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தளிரோடு வழியாக திருமூர்த்தி மலை, அமராவதி, மூணார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாக பஸ், வாகன, சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் குறுக்காக ரயில் பாதை செல்கிறது. ரயில் வரும் சமயத்தில் கேட் அடைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி சதுக்கம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளின் இரவு நேர பயணத்திற்கு ஏதுவாக பாலத்தின் இரண்டு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் கட்டப்பட்ட பின்பு போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்தை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் மேம்பாலத்தில் விளக்குகள் எரியாமல் ஒரு பகுதி இருள் சூழ்ந்து விடுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்பு வாகன ஓட்டிகள் விரைவான பயணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது.

அத்துடன் பாலத்தின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் பாதை முடிவடைந்து தார் சாலை தொடங்கும் பகுதியில் ஆங்காங்கே துளை விழுந்துள்ளது. அதை சீரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாலத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பாலத்தில் பழுதடைந்த விளக்குகளை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் பாலத்தில் ஏற்பட்டுள்ள துளைகளை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...