வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான போர்வை, பாய், சோப்பு, எண்ணெய், அரசி உட்பட சமையலுக்கு பொருட்கள் கோவையிலிருந்து தென் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


கோவை: தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் தென் மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் தனியார் அமைப்புகள், அரசு பணியாளர்கள் ஈடுபட்டனர்.



இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் போர்வை, பாய், சோப்பு, எண்ணெய், அரசி உள்ளிட்ட சமையலுக்கு தேவையான நிவாரண பொருட்கள் இன்று கொண்டு செல்லப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கோவையிலிருந்து தென் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...