திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் கொண்டாட்டம் - உறி அடித்து, சிலம்பம் சுற்றி ஆட்சியர் மகிழ்ச்சி

பொங்கல் விழாவில் 101 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் மாட்டுவண்டியில் வந்து விழாவை சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் வந்து உறி அடித்தும், சிலம்பம் சுற்றியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சாமளாபுரம் குளக்கரையை மையப்படுத்தி சாமளாபுரம் குளக்கரையில் குளக்கரை சுற்றுலா பொங்கல் என திட்டமிடப்பட்டு பொங்கல் விழா நடத்தப்பட்டது.



இந்த பொங்கல் விழாவில் 101 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.



இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டார்.



பொங்கல் வைத்த நிகழ்வு நிறைவடைந்த பின்பு சாமளாபுரம் குளக்கரையில் இருந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் மாரியம்மன் கோவில் திடல் வரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் மாட்டுவண்டியில் வந்தனர்.



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உறி அடித்தும், சிலம்பம் சுற்றியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து சிலம்பாட்டம், கரகாட்டம், வள்ளி கும்மி ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...