தாராபுரம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும் உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், பிஜேபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதிக்கு உட்பட்டு மூன்றாம் பாலினத்தார் 12 பேரும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினம் 20 பேரும் இரு தொகுதிகளிலும் சேர்த்து 32 பேர் மூன்றாம் பாலினத்தவர் சேர்க்கப்பட்டுள்ளனர் காங்கேயம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் வாக்காளர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 438 வாக்காளர்கள் இறுதி வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர் மேலும் தேர்தல் வரவுள்ளதால் 18 வயது உள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...